ட்ரெண்டிங்

அரையாண்டு தேர்வுகள்- புதிய அட்டவணை வெளியீடு!

 

மிக்ஜாம் புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6- ம் வகுப்பு முதல் 10- ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13- ஆம் தேதி முதல் டிசம்பர் 22- ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் டிசம்பர் 22- ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

 

அரையாண்டு பொதுத்தேர்வை வரும் டிசம்பர் 13- ஆம் தேதி புதன்கிழமை முதல் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.