ட்ரெண்டிங்

அண்ணாமலையின் பாத யாத்திரை தேதி மாற்றம்!

 

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வரும் டிசம்பர் 25- ஆம் தேதி நான்காம் கட்ட பயணத்தை சேலம் மாவட்டத்தில் தொடங்கவிருந்த நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், யாத்திரையின் பொறுப்பாளருமான நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, டிசம்பர் 30- ஆம் தேதி கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதிகளிலும், டிசம்பர் 31- ஆம் தேதி ஏற்காடு, வீரபாண்டி தொகுதிகளிலும், ஜனவரி 01- ஆம் தேதி எடப்பாடி, ஓமலூர் தொகுதிகளிலும், ஜனவரி 02- ஆம் தேதி சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதிகளிலும், ஜனவரி 04- ஆம் தேதி மேட்டூர், தருமபுரி தொகுதியிலும் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.