ட்ரெண்டிங்

மேட்டூர் அணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பு அதிகரிப்பு!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.  

செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்களில் தண்ணீர் திறப்புக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், நீர் மின் நிலையங்களில் சுமார் 244 மெகாவாட் மின் உற்பத்திச் செய்யப்பட்டு வருகிறது.