ட்ரெண்டிங்

சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்து கணவன்- மனைவி உயிரிழப்பு!

மேட்டூர் அருகே சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்த  கணவன், மனைவி இருவர் உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்த ராஜா கட்டிட வேலையும், மனைவி சரஸ்வதி கல் உடைக்கும் வேலையும் செய்து வந்தனர். இந்த நிலையில், இவர்களது மூன்றாவது மகள் அஞ்சலி பள்ளி முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்துப் பார்த்த போது, பெற்றோர் இருவரும் இறந்துக் கிடந்தனர். 

இது குறித்து தொலைபேசி மூலம் கொளத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான காரணம், கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சனையா? என்கிற கோணத்தில் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.