ட்ரெண்டிங்

அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்!

 

மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

தொடர் மழையின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் வரும் டிசம்பர் 11- ஆம் தேதி முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், டிசம்பர் 07 மற்றும் டிசம்பர் 08 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் டிசம்பர் 14 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அறிவித்துள்ளார்.