ட்ரெண்டிங்

சபாநாயகர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நிர்வாகத்திறமை இல்லாத தி.மு.க. அரசால் ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி குற்றம் செய்திருந்தால், அவர் கைது செய்யப்பட்டதில் தவறில்லை.

 

முறையாக மழைநீர் வடிகால் பணிகளை நடத்தியிருந்தால் சென்னைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மழைநீர் தேங்காமல் இருக்க ரூபாய் 4,000 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டதாக தி.மு.க. அரசு கூறியது. நிதி ஒதுக்காமல் அம்மா உணவகத்தை மூடும் நிலைக்கு கொண்டு வந்த தி.மு.க. அரசு கார் பந்தயத்தை நடத்துகிறது.

 

தீவுத்திடலில் கார் பந்தயம் நடத்த ரூபாய் 42 கோடி செலவு செய்வது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது. அமலாக்கத்துறை குறித்த சபாநாயகர் அப்பாவு பேச்சை பொருட்படுத்தத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.