ட்ரெண்டிங்

இனி யாரும் பரப்புரையை மேற்கொள்ளக் கூடாது- சத்யபிரதா சாஹு பேட்டி! 

இனி யாரும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி யாரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது; மக்கள் அமைதியாக இருந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்; வீடு வீடாக சென்று கூட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளக் கூடாது. 

மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளைத் தவறாமல் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.