ட்ரெண்டிங்

அனுமதியின்றிக் கடத்தப்பட்ட இரண்டரை டன் வெடி மருந்துகள் பறிமுதல்!

 

சேலத்தில் சட்டவிரோதமாக இரண்டரை டன் ஜெலட்டின் உள்ளிட்ட வெடி மருந்துகளைக் கடத்திச் சென்ற வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் மாவட்டம், கருப்பூர் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையின் போது, பிடிப்பட்ட வாகனங்களில் இருந்த இரண்டரை டன் வெடிப்பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர், வாகனத்தை இயக்கி வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இளையராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில், கேரளாவில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகளுக்கு வெடிப்பொருட்களை ஆவணங்களின்றி எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளையராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இது தொடர்புடைய தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.