ட்ரெண்டிங்

கல்லூரியின் கழிவுநீர் கால்வாயில் கிடந்த மாணவர்.....போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், மாணவர்க

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்ற மாணவர் விஜய் சாரதி, கல்லூரி முன் உள்ள கழிவுநீர் கால்வாய் அருகே மயங்கிக் கிடந்தார். உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர், மாணவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஜய் சாரதி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஓமலூர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

அதே சமயம், மாணவரின் காலில் வெட்டு காயம் உள்ளதால், மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜன், மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆய்வாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவரின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

 

அதேபோல், காவல்துறையினரும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.