ட்ரெண்டிங்

கண்ணனூர் கோயில் நிலத்தில் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் திருட்டு!


ஓமலூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தென்னை மரத்தோட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தேங்காய்கள் திருடப்பட்டுள்ளன. 

சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேங்காய்களை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் அறங்காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தேங்காய்களை முருகேசன் என்பவர் வெட்டி எடுத்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.