ட்ரெண்டிங்

ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த மே 22- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்கள், பழங்களால் செய்யப்பட்ட அலங்காரங்கள், பொம்மைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். 

குறிப்பாக, வார இறுதி நாட்கள் என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனவோட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

எனினும், இதமான காலநிலை, படகு சவாரி என ரம்மியமான சூழல் நிலவும் ஏற்காட்டில், பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள்.