ட்ரெண்டிங்

நடிகை நமீதாவின் கணவர் உட்பட இருவருக்கு காவல்துறை சம்மன்!

 

MSMEமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவர் மற்றும் பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனமான MSME பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு புகார் சென்ற நிலையில், நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சேலம் மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

இந்த MSME மோசடி தொடர்பாக, ஏற்கனவே முத்துராமன் மற்றும் துஷ்யந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காவல்துறையினரின் நடவடிக்கை, சேலம் மாவட்ட பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.