ட்ரெண்டிங்

பொருட்கள் வாங்குவது போல் பணத்தைத் திருடிய நபர்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேன்சி ஸ்டோரில் பொருட்களை வாங்குவது போல் வந்த நபர் கல்லாப்பெட்டியில் இருந்து 20,000 ரூபாய் பணத்தைத் திருடியுள்ளார்.

 

இதனையறிந்த பேன்சி ஸ்டோரின் உரிமையாளர், அவரைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்ற போது, அவரை தள்ளிவிட்டு,அந்த நபர் தப்பியோடியுள்ளார். இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, பணத்தைக் கொள்ளையடித்த மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

 

இதனிடையே, பேன்சி ஸ்டோரில் உள்ள சிசிடிவி கேமராவில் மர்மநபர் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.