ட்ரெண்டிங்

இளம்பெண்ணை கொலை செய்த கோயில் பூசாரி கைது-விசாரணையில் பரபரப்பு தகவல்!

 

ஓமலூர் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கோயில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், சேடப்பட்டியைச் சேர்ந்த செல்வி என்பவர் மயமானதாக அவரது கணவர் பசவராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரி குமார், இளம்பெண்ணை கொலை செய்து தூக்கியெறிந்து விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து, கோயில் பூசாரி குமாரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தன்னிடம் குறி கேட்க வந்த போது, இளம்பெண் செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், 30,000 ரூபாய் பணம் கொடுத்த போது, அதைத் திருப்பிக் கொடுக்காமல், அந்த பெண் ஏமாற்ற முயன்றதால் சயனைடு கொடுத்து கொலை செய்ததாக பூசாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

மேலும், அவரது கழுத்தில் இருந்து ஆறு சவரன் தங்க செயினை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். கொலையான செல்விக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், குழந்தை பாக்கியத்திற்காக, குறிக்கேட்கச் சென்ற போது, பூசாரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமும், செல்விக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.