ட்ரெண்டிங்

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து- கணவன், மனைவி உயிரிழப்பு!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உறவினர் திருமணத்திற்காக, இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்- மனைவி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதையடுத்து, அப்பகுதி மக்கள் மின்விளக்குகள் இல்லாததால், தொடர்ந்து இதுபோன்று விபத்து நடைபெறுவதாகவும், மேம்பாலம் அமைப்பதற்கு பல்வேறு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றனர்.

 

இதனிடையே, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.