ட்ரெண்டிங்

குறைந்த அளவில் காணப்பட்ட கால்நடைகளின் வரத்து! 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 18) நடைபெறுவதையொட்டி, சேலம் பெருமாள் கோவில் மாட்டுச்சந்தை ஒருநாள் முன்னதாகக் கூடியது. 

தேர்தல் நேரம் என்பதால் சந்தைக்கு கால்நடைகளின் வரத்தானது 40% குறைந்து காணப்பட்டது. வழக்கமாக, இந்த சந்தையில் வாரந்தோறும் ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 7 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தேர்தல் நேர கெடுப்பிடிகள் காரணமாக, சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.