ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது?-விரிவான தகவல்!

 

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், மின்னாம்பள்ளி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (நவ.18) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளின் மின்விநியோகம் இருக்காது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.18) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தலைவாசல், நத்தக்கரை, ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியக்குறிச்சி, மணிவிழுந்தான், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம், சாத்தப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.18) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஆத்தூர், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்குகாடு, பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.18) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.