ட்ரெண்டிங்

கிணற்றில் தவறி விழுந்த நபர்.... உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை.... குவியும் பாராட்டு!

 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 55). இவர் இன்று (நவ.15) காலை 09.00 மணியளவில் தனது வீட்டு அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றைச் சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.

 

 

சேறும், சகதியுமாக இருந்த நிலையில், செல்வகுமார் கால் வழுக்கி சுமார் 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரும் அலறல் சட்டம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, தாமதமின்றி உடனடியாக விரைந்து வந்து செல்வகுமாரை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.