கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றன.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடுமையான குளிர் நிலவுவதால், சேலம் மாவட்டம் மட்டுமின்றி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல், ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யக் கூட்டம் அலை மோதியது.
அதேபோல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் தங்கும் விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்