ட்ரெண்டிங்

ஏற்காடடில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை!

 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவதாக டேக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாலதி ஆகியோர் இன்று (நவ.04) காலை 11.00 மணி முதல் முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

 

அப்போது, ஒரு ஜே.சி.பி. இயந்திரம், மூன்று சரக்கு வாகனம், ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் என 7 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டிய வாகனவோட்டிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஒரே நாளில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஏற்காடு பகுதியில் தொடர்ந்து வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.