ட்ரெண்டிங்

தனியார் கல்லூரியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 29) காலை 10.00 மணிக்கு ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவினையொட்டி, மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்தும், அத்திப் பூக்களால் கோலங்கள் போட்டும், மகாபலி சக்கரவர்த்தியை போல் மாணவர்கள் வேடமிட்டும் மற்றும் நடனமாடியும் தங்கள் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். 

இந்த விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் விஜய் கணேஷ், பொருளாளர் செந்தில் குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் விமாதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.