ஆன்மிகம்

19 ஆண்டுகளுக்கு பிறகு சென்றாய பெருமாள், புஜங்கீஸ்வரர் திருவீதி உலா!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு சென்றாயப் பெருமாள் மற்றும் புஜங்கீஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது.  

 

இந்த திருவீதி உலாவில் ஒவ்வொரு வீடாகச் சென்று தேங்காய், பழம் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் நேர்த்திக் கடனாக பெண்களும், குழந்தைகளும் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்த திருவீதி உலாவானது சுமார் ஐந்து மணி நேரமாக அனைத்து தெருக்களுக்கும், வீடுகளுக்கும் சென்று, பின்னர் கோயில் வந்தடைந்தது.

 

அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.