ட்ரெண்டிங்

புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு- மாணவர்களுக்கு இனிப்புகள், பேனாக்களை வழங்கிய அருள் எம்.எல்.ஏ.!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசுப் பள்ளிக் கட்டடம் பாழடைந்தது குறித்து செய்திகள் வெளியான நிலையில், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டு திறக்கப்பட்டுள்ளது.

 

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிதியைக் கொண்டு, பள்ளி வளாகத்திலே இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்த நிலையில், பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் அருள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பேனாக்களையும் அருள் எம்.எல்.ஏ. வழங்கியதுடன், பள்ளி வகுப்பறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.