ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை.யில் நடந்த தமிழ்க் கனவு, மரபு, பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாணவ, மாணவ

பெரியார் பல்கலை.யில் நடந்த தமிழ்க் கனவு, மரபு, பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு! 

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார், மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். 

பரப்புரை நிகழ்ச்சியில் சிறந்த கேள்விகளைக் கேட்ட மற்றும் சிறப்பாக கருத்துரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சித்துறையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் நா.இராமலட்சுமி, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.