ட்ரெண்டிங்

பத்திர பதிவு, இ-சேவை உள்ளிட்ட 8 கடைகளின் பூட்டு உடைப்பு!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அடுத்தடுத்து எட்டு கடைகளின் பூட்டை உடைத்து, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

தம்மம்பட்டியில் உள்ள புதிய சார் பதிவாளர் அலுவலகம் அருகே ராஜா என்பவர் தனக்கு சொந்தமான காம்பளக்ஸில் பத்திரம் விற்பனை, பத்திரப் பதிவு, இ-சேவை, டீ கடை என எட்டு கடைகளையும் வாடகைக்கு விட்டுள்ளார்.

 

இரவுக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில், சேகர் என்பவரது கடையில் பணிபுரியும் தனலட்சுமி என்பவர் கடையைத் திறக்க வந்துள்ளார். அப்போது, அனைத்து கடைகளின் பூட்டையும் உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தம்மம்பட்டி காவல்துறையினர், கடைகளை ஆய்வு செய்தும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்தும், கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.