ட்ரெண்டிங்

சேலம் எம்.பி.யின் அறிவிப்பால் விமான பயணிகள் மகிழ்ச்சி! 

தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் அறிவிப்பால், விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம்- சென்னை வழித்தடத்தில் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், கடந்த பிப்ரவரி மாதம் 20- ஆம் தேதி மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து, சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விரைவில் சேலம் - சென்னை இருமார்க்கமும் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 முறை இண்டிகோ விமான சேவை இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம் எம்.பி.யின் அறிவிப்பால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.