ட்ரெண்டிங்

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய குன்று பகுதியில் திடீர் தீ விபத்து! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய குன்று பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

கடுமையான வெயிலால் ஆங்காங்கே வனப்பகுதிகளை காட்டுத் தீ ஏற்படும் அதே வேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் தீ வைத்துள்ளனர். இதில் மரம், செடிகள் மளமளவென எரிய தொடங்கியுள்ளது. 

அதே நேரத்தில் அருகில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.