ட்ரெண்டிங்

தொடர்ந்து உயர்ந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,285 கனஅடி வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று (நவ.03) காலை 08.00 மணி நிலவரப்படி, 52.73 அடியில் இருந்து 52.95 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 19.72 டி.எம்.சி.யாக உள்ளது,

 

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,299 கன அடியில் இருந்து 2,285 கனஅடியாகக் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.