ட்ரெண்டிங்

படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்றுக் கொண்டு சகாசம் செய்தபடி, பயணம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தம்மம்பட்டியில் இருந்து கெங்கவல்லி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேலநிலைப்பள்ளிக்கு செல்லும் பகுதியில் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாலும், பாதுகாப்பு பணிக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் இல்லாததாலும், மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் நலன் கருதி, கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.