விளையாட்டு

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்று அசத்திய மாரியம்மன் தங்கவேலு!

 

4- வது ஆசிய பாரா போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று (அக்.22) தொடங்கியது. வரும் அக்டோபர் 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில், இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 4 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

இன்று (அக்.23) நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சைலேஷ் குமார் தங்கம் பதக்கமும், ராம் சிங் வெண்கல பதக்கமும் வென்றனர். அதேபோல், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியம்மன் தங்கவேலு, உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்று பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

 

வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.