விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு! 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

புயல் காரணமாக, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள், நாடு திரும்பாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் 3 பேர் விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு பதிலாக மாற்றுவீரர்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.