ஆன்மிகம்

கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் கோயில் தேரோட்டம்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள மூக்கனூர் கிராமத்தில் தேங்கல்கரடு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள வனப்பெருமாள் கோயிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், பக்தர்களுக்கு பாயாசத்துடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.