ட்ரெண்டிங்

கொப்பரை விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கிலோவிற்கு 5 ரூபாய் அதிகரித்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இன்று (அக்.20) நடைபெற்ற ஏலத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் உற்பத்திச் செய்த 170 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் ரூபாய் 6,15,361- க்கு கொப்பரைகள் ஏலம் போனது. இன்று வழக்கமான கொப்பரை வரத்து இருந்தாலும், கிலோவிற்கு 5 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து விற்பனையானது.

 

கொப்பரை விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.