ட்ரெண்டிங்

இந்திய ராணுவத்தில் சேர சேலம் இளைஞர்களுக்கு அழைப்பு!

 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டிற்கு இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் நடத்தும் இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 29/01/2024 முதல் 09/02/2024 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

 

இம்முகாமில் கோயம்புத்தூர், தேனி, சேலம், மதுரை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.

 

மேலும் விபரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் தொலைபேசி 0422-2222022 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

எனவே, இம்முகாமில் பெருமளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர், உதவி இயக்குநர் (பொ) கேட்டுக் கொண்டுள்ளார்.