ட்ரெண்டிங்

2 லட்சத்து 68 ஆயிரம் தேர்தல் புகார்கள்! 

தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 2 லட்சத்து 68 ஆயிரம் புகார் வந்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, 2,68,080 புகார்கள் சி விஜில் செயலி மூலம் பெறப்பட்டுள்ளது. விதிமீறல் புகார்களில் 92% வழக்குகள் சராசரியாக 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது 51 புகார்களும், காங்கிரஸ் மீது 59 புகார்களும், பிற கட்சிகள் மீது 90 புகார்களும் வந்துள்ளன. இவ்வாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.