ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு..... முக்கிய அறிவிப்பு!

 

சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தைத் தவிர்க்கும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கூட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பட்டாபிராம்- திருநின்றவூர் ரயில் நிலையங்களில் சென்னை- திருவள்ளூர் வழித்தட ரயில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப ரீதியிலான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22649) இன்று (அக்.17) இரவு 11.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். எனினும், வியாசர்பாடி முதல் திருவள்ளூர் வரை மெதுவாக ரயில் இயக்கப்படும் என்பதால், பெரம்பூர் ரயில் நிலையத்தைத் தவிர்க்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.