ட்ரெண்டிங்

மாணவர்களுக்கான சத்து மாத்திரைகள் தீயில் கொட்டி அழிப்பு!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சத்து மாத்திரைகள் கிலோ கணக்கில் கொட்டி எரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வட்டார சுகாதாரத்துறை சார்பில், கடந்த ஓராண்டுகளுக்கு முன்பாக, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவை மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படாத நிலையில், மாத்திரைகள் கொட்டி எரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில், காலாவதியாகும் தருவாயில் இருந்த மாத்திரைகளை அழிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.