ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது?- விரிவான தகவல்!


சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி, கருமந்துறை, நங்கவள்ளி ஆகிய மூன்று துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருமந்துறை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண் டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோயில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்களில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.