ட்ரெண்டிங்

பொக்லைன் இயந்திர சக்கரம் ஏறியதில் மேற்பார்வையாளர் உயிரிழப்பு!

நரசிங்கபுரம் ரயில்வே மேம்பாலப் பணியின் போது, பொக்லைன் இயந்திரத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், அங்கிருந்த மேற்பார்வையாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளம் தோண்டப்பட்ட போது, மண் மீது நடந்துச் சென்ற மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சறுக்கி விழுந்துள்ளார்.

 

அப்போது, அவர் விழுந்ததை அறியாமல் பொக்லைன் இயந்திரத்தை ஓட்டுநர் சக்திவேல் இயக்க, கீழே விழுந்துக் கிடந்த ஈஸ்வரமூர்த்தி மீது சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்தார்.  

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.