ட்ரெண்டிங்

ஆலப்புழாவில் இருந்து டெல்லிக்கு இன்று சிறப்பு ரயில்!

 

ஆலப்புழாவில் இருந்து டெல்லிக்கு இன்று (டிச.01) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (டிச.01) ஆலப்புழாவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (டிச.01) இரவு 11.00 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 04- ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு டெல்லியைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில், எர்ணாகுளம், போத்தனூர், ஈரோடு, திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், போபால் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்,

 

இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.