ட்ரெண்டிங்

மாணவிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்! 

தனியார் கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, இ.ஆ.ப. இன்று (மே 27) நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மணியிடம் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவர்கள் தனி கவனம் செலுத்தி மாணவியர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.வி.தனபால் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவிகளை ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.