ட்ரெண்டிங்

கோயில் உண்டியலை உடைத்துப் பணத்தைத் திருடிய பூசாரி!

ஓமலூர் அருகே கோயில் பூசாரி ஒருவரே பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தைத் திருடும் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயில் பூசாரியான வெள்ளையனிடம் விசாரணை நடத்திய போது, அடையாளம் தெரியாத நபர்கள் திருடி விட்டதாகத் தெரிவித்தார்.

 

ஆனால், கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வுச் செய்த போது, பூசாரி உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவுச் செய்த ஓமலூர் காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

 

இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.