ட்ரெண்டிங்

கோவை- ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை- ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜபல்பூர்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 02198) வரும் அக்டோபர் 06- ஆம் தேதி முதல் அக்டோபர் 27- ஆம் தேதி வரையும், கோவை- ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 02197) வரும் அக்டோபர் 09- ஆம் தேதி முதல் அக்டோபர் 30- ஆம் தேதி வரையும் நீட்டிப்பட்டுள்ளது.

 

இந்த ரயில்கள் பாலக்காடு, சொர்ணூர், மங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 11.50 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

அதேபோல், வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று பிற்பகல் 03.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், புதன்கிழமை அன்று காலை 08.45 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.