ட்ரெண்டிங்

வெடிப்பு சரிச் செய்யப்பட்டு மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி!

வெடிப்பு சரிச் செய்யப்பட்டு மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி!

 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

 

கடந்த செப்டம்பர் 29- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய கொதிகலன் குழாயில் வெடி ஏற்பட்டு, 545 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்தது.

 

இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு பணிகளை முடித்தனர். அதேபோல், 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது