ட்ரெண்டிங்

சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்!

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சாலையோரம் நிறுத்தப்படும் இரண்டு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், பொதுமக்களும் சாலையோரம் நடக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

 

நாள்தோறும் ஏராளமானோர் வந்துச் செல்லும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த முறையான நடவடிக்கை எடுக்காததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

எனவே, மருத்துவமனை வளாகத்திலேயே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கூறுகையில், மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.

 

ஆத்தூர்,வீரக்கனூர்,தலைவாசல், கெங்கவல்லி, மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.