ட்ரெண்டிங்

படைப்புழு தாக்கத்தால் மக்காச்சோள விளைச்சல் பாதிப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

நல்ல லாபம் கிடைப்பதால், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், படைப்புழுத் தாக்குதலால் தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் படைப்புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த மானிய விலையில் மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது மருந்துகள் வழங்கப்படாததால் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள், நடவடிக்கைக்கு எடுத்து மானிய விலையில் மருந்துகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.