ட்ரெண்டிங்

நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமானத் தேர்தல்- அன்புமணி ராமதா

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடிக் களப்பணியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று (செப்.09) நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க.வின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது, "அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 2026- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். இதில், பாட்டாளி மக்கள் கட்சியினர், சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். 2026- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. அபரிமிதமான வெற்றியைப் பெற வேண்டும்.  

 

வாக்குச்சாவடிக் களப்பணியாளர்கள் குழுக் குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு இல்லத்தில் உள்ள மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளராக இருந்தாலும் அவர்களை இல்லத்தில் சென்று சந்தித்து நமது கட்சிக்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

இந்த கூட்டத்தில் மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.