ட்ரெண்டிங்

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம் என அதிமுக பொதுச

சேலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடியை பாதுகாக்கத்தான் இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் சேர்ந்துள்ளதாகவும், கொள்ளை அடித்த பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் அப்போது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தால் இந்த பிரச்சினை தீரும் எனவும் எண்ணிதான் திமுக வெற்றி பெறும் என சொல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் சொல்வதாக தெரிவித்த அவர் ஸ்டாலினுக்கு தன் கட்சி மீது நம்பிக்கை இல்லை இந்தியா கூட்டணி மீதுதான் நம்பிக்கை உள்ளது என்றார்.

 

மேலும் அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களின் உணர்வை புரிந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக தெரிவித்த அவர் இது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு என்றார். மேலும் அதிமுக வலுவான கட்சி என்ற எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இனி அதிமுகவிற்கு இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.