ட்ரெண்டிங்

30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.... அடிக்கல் நாட்டிய பேரூராட்சித் தலைவர்!

சேலம் மாவட்டம், மேட்டூருக்கு அருகே 5 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் தெய்வானை பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 

வீரக்கல்புதூர் பேரூராட்சியில் உள்ள சில வார்டுகளில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத நிலையில், கலைஞர் நகர்ப்புற சாலை மேம்பாட்டு 15வது நிதிக் குழுவின் மூலம் அதற்கான நிதி பெறப்பட்டது. இதையடுத்து, ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வடிகால், சாலை உள்ளிட்டத் தேவைகள் பூர்த்திச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பேரூராட்சித் தலைவர் தெய்வானை, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.