ட்ரெண்டிங்

தி.மு.க. அ.தி.மு.க. நிர்வாகிகள்...சமாதானப்படுத்தி அனுப்பிய காவல்துறை! 

சேலம் மாவட்டம், எடப்பாடியில் கோயிலில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

சேலம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கிய நிலையில், சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிக்கு சால்வை அணிவித்த கோயில் நிர்வாகத் தரப்பு, கோயிலின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெருமளவில் உதவிச் செய்ய வேண்டும் என கோரியது. 

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறியதால்,  இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.